மலையாளத்தில் ‘ககனச்சாரி’, ‘பொன்மேன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த அஜித் விநாயகா பிலிம்ஸ், தனது முதல் தமிழ் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில், வெறும் 45 நாட்களுக்குள் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நிறைவுசெய்யப்பட்டுவிட்டது.

இந்தப்படத்தில் விமல் நாயகனாகவும், முல்லை அரசி நாயகியாகவும் நடித்துள்ளனர். இரட்டையர் இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே. தோப்பில் இப்படத்தை இயக்கியுள்ளனர். கிராமப்புறத்தை மையமாகக் கொண்டு, குடும்ப நகைச்சுவை எண்டர்டெயினராக இப்படம் உருவாகியுள்ளது.
மேலும், சேத்தன், பருத்திவீரன் சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எழுத்தாளர்கள் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி. பால் ஆகியோர் கதையை எழுதியுள்ளனர். சுதி கிருஷ்ணா திரைக்கதை அமைத்துள்ளார். ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஜிஜு சன்னி இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.