நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக்கியிருக்கும் படம் ‘கூலி’. இப்படத்திற்கு இசையமைப்பாளர்அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின்மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

எப்போதும் அனிருத் தான் இசையமைத்த படங்கள் திரைக்கு வருமுன், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ‘பயர் எமோஜி’யை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இது அந்த படம் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நம்பும் ஒரு அடையாளமாக இருந்தது. ஆனால் அண்மைக்காலங்களில் அவர் இசையமைத்த சில படங்களுக்கு அந்த எமோஜியைப் பயன்படுத்தவில்லை. என்ன காரணம் என்ற கேள்வி ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் இனி பயர் எமோஜி போடுவதை நிறுத்திவிட்டேன். சில படங்களுக்கு நான் எமோஜி போட்டும் அது தவறு ஆகியுள்ளது. ஜெயிலர் படம் நான் நன்றாக இருக்கும் என நம்பி பயர் எமோஜி போட்டேன். ஆனால் சில படங்களுக்கு நான் இதை செய்தபோது எனக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால் கூலி படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. அதனால்தான் இந்த படம் தொடர்பாக நான் பயர் எமோஜியை இங்கே எமோஜிகளை பதிவிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.