இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள ‘பான்டர்’ என்ற படம் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காய்ஷப் பாபி தியோலை வைத்து ‘பான்டர்’ (மங்கி இன் எ கேஜ்) என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பாபி தியோல் உடன் நடிகை சான்யா மல்ஹோத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, இந்தப் படம் மிகவும் புகழ்பெற்ற டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்தத் திரைப்பட விழா வரும் செப்டம்பர் 4 முதல் 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
