Touring Talkies
100% Cinema

Thursday, July 17, 2025

Touring Talkies

காவல்துறை மீது மரியாதை எனக்கு அதிகரித்துள்ளது – நடிகை திரதா சவுத்ரி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ஆஷ்ரம்’ வெப்சீரிஸ் மூலம் புகழ்பெற்ற திரிதா சவுத்ரி தற்போது பல திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார். அவர் நடித்துள்ள சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் வகையைச் சேர்ந்த திரைப்படமான ‘சோ லாங் வேலி’ ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதில் அவர் ஒரு போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை மான் சிங் இயக்கியுள்ளார். இந்நிலையில், திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரியாக நடித்த அனுபவத்தைப் பற்றி பேசும்போது, “போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்ததன் பிறகு போலீசாரிடம் எனக்கு இருக்கின்ற மரியாதை அதிகரித்துள்ளது. ஏனெனில் அவர்கள் நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாக்க மிகுந்த உழைப்பு செய்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை சுலபமானது அல்ல. அவர்கள் தங்களது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடியாமல், கடமையின் காரணமாக பல சமரசங்களை மேற்கொள்கிறார்கள்,” என்றார்.

பெண் போலீஸ் கதையைப்பற்றி அவர் மேலும் கூறும்போது, “சமீபத்தில் நான் கஜோல் நடித்த ‘தோ பட்டி’ என்ற படத்தை பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் வரும் வழக்குகளை அவர் திறமையாக கையாள்கிறார். ‘ஆஷ்ரம்’ புகழ் நடிகை என அழைப்பதில் எனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை. இது போன்ற வகையில் பல நடிகர்களும் அடையாளம் காணப்படுகிறார்கள். இது மக்களின் அன்பின் வெளிப்பாடு என நினைக்கிறேன். எதிர்காலத்தில் புதிய படங்கள் மற்றும் தொடர்களில் நடிக்கும்போது, அவற்றின் பெயர்களிலேயே மக்கள் என்னை அடையாளம் காணுவார்கள் என நம்புகிறேன்,” என தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News