தமிழில் ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’, ‘சர்தார்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். தற்போது அவர் ‘சர்தார் 2’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் பிசியாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், பி.எஸ். மித்ரன் அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் எனவும், இப்படத்தை ஏ.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகள் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பின்பாக துவங்கும் என கூறப்படுகிறது.