Touring Talkies
100% Cinema

Friday, June 27, 2025

Touring Talkies

ராஜமௌலி இயக்கும் SSMB29 படத்திற்காக ஒடிசாவின் பாரம்பரிய நடனத்தை கற்ற நடிகை பிரியங்கா சோப்ரா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு மிகுந்த வேகத்துடன் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ப்ரித்விராஜ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். மகேஷ்பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் தொடர்ச்சியாக படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக பிரியங்கா சோப்ரா ஒடிசாவின் பாரம்பரிய நடனமான ‘மரியூபன்ச் சவு’ எனும் நடனத்தைக் கற்றுள்ளார். இந்த நடனத்தை பிரியங்காவிற்கு புகழ்பெற்ற நடன கலைஞர் விக்கி பார்தியா பயிற்சி அளித்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விக்கி பார்தியா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தும், அவருடன் பணியாற்றிய அனுபவங்களை கூறியும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “பிரியங்கா சோப்ராவுடன் பணிபுரிந்தது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. அவர் மிகுந்த உற்சாகம், நகைச்சுவை உணர்வும் கொண்டவர். தன்னை சுற்றியுள்ள அனைவரிடமும் அன்பாக அணுகும் பண்புடையவர். நடன ஒத்திகை மற்றும் படப்பிடிப்பு நேரங்களில் அவருடைய சக்தி மிகுந்த முயற்சியை காணும் போது அது அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. அவர் தனது வேலைக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் என பாராட்டியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News