இந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படத்தின் தலைப்பை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, இப்படத்திற்கு ‘மைசா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். இப்படத்தின் தயாரிப்பாளர்களாக அஜய் மற்றும் அனில் சயபுரெட்டி உள்ளனர். இப்படத்தில் ராஷ்மிகா, ‘மைசா’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
முன்னதாக ராஷ்மிகா, தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், தற்போது வரை ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகு, ராஷ்மிகா பாலிவுட் திரையுலகிலும் தனது பயணத்தை வலுப்படுத்தி வருகிறார். தற்போது, அவர் ‘தமா’ என்ற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். இது ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் முதல் ஹாரர் திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.