சினிமா துறையில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே நடைபெற்று வருவதாக நடிகர் விஜய் ஆண்டனி தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது, “அட்டக்கத்தி”, “பீட்சா”, “சூது கவ்வும்”, “இன்று நேற்று நாளை”, “மாயவன்” போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகியுள்ள “மார்கன்” படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்தத் தொடரில், நேற்று மதுரையில் உள்ள ஒரு தனியார் மாலில் இப்படத்தின் புரமோஷன் விழா நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, “சினிமா துறையில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது, இந்தப் பிரச்சனை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது இதை தடுக்க வேண்டும் அதுதான் சமுதாயத்திற்கு நல்லது என தெரிவித்துள்ளார்.