தமிழ் சினிமாவில் ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சதா, தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார். தமிழ் மொழியுடன் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். ‘உன்னாலே உன்னாலே’ படத்திற்கு பிறகு, தமிழ் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது.

தற்போது சதா முழுமையாக சினிமாவிலிருந்து ஒதுங்கி, புகைப்படக் கலைஞராக மாறியுள்ளார். காட்டுகளுக்குள் சென்று பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் புகைப்படங்களை எடுத்துவருகிறார். 41 வயதாகும் சதா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுபற்றி கேட்கும்போது, திருமணத்தின் மீது எனக்கு ஆர்வம் இல்லை. புகைப்படத் துறையில் இன்னும் பல சாதனைகளை அடைய வேண்டும். அதன் பிறகு திருமணத்தை பற்றி யோசிக்கலாம். எல்லாவற்றையும் காலமே தீர்மானிக்கும். எனவே எந்த அவசரமும் இல்லை,” என பதிலளித்துள்ளார்.
சதா தற்போது வெளிநாடுகளுக்கு பயணம் செய்து, அங்குள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் புகைப்படக் குழுவினருடன் புகைப்படங்களை எடுத்துவருகிறார். அதேபோல், தேடி வரும் சினிமா வாய்ப்புகளை நிராகரிக்கிறார் என கூறப்படுகிறது.