Touring Talkies
100% Cinema

Sunday, June 22, 2025

Touring Talkies

நயன்தாரா என்மீது வைத்த மிகப்பெரிய மரியாதை… நடிகர் யோகி பாபு நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. சமீபத்தில் நடிகர் யோகி பாபு அளித்த ஒரு பேட்டியில், நயன்தாராவுடனான படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.  

நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்தவர் யோகி பாபு. ஒரு சாதாரண நகைச்சுவை நடிகருடன் இணைந்து ஜோடியாக நடிப்பதை நயன்தாரா ஏற்றுக்கொண்டது பெரிய விஷயம்தான். ஆனால், யோகி பாபுவை ஒரு சாதாரண நடிகராக அவர் ஒருபோதும் எண்ணவில்லை என்று கூறியுள்ளார் யோகி பாபு.

அந்தப் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார். “ஒரு காட்சியில் நயன்தாரா எனும் கதாபாத்திரம், ஒரு வாகனத்தில் அமர்ந்திருக்கும் எனது முகத்தில் தன்னுடைய காலால் உதைக்கும் காட்சி எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், நயன்தாரா தன்னுடைய காலால் என் முகத்தில் தொடுவதற்கே தயங்கினார். எந்த அளவுக்கு சொன்னாலும் அவர் சம்மதிக்கவில்லை.பின்னர், நெல்சன் அந்த காட்சி மிகவும் முக்கியம் எனவும், நன்றாக வரும் எனவும் சொன்ன பிறகு, நயன்தாரா தன்னுடைய கால்களை நன்றாக சுத்தம் செய்தார். வாசலைன் தடவி, அந்தக் காட்சியை முகத்தில் கால் பட்டுவிடாமல் எடுக்கும் விதமாக நடித்தார். தனது காலில் இருக்கும் தூசி கூட என் முகத்தில் பட்டுவிடக் கூடாது என்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தினார்,” என யோகி பாபு வியப்புடன் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News