கீர்த்தி பாண்டியன் தற்போது ‘அஃகேனம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவரது தந்தையும் நடிகருமான அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக தன் அப்பாவுடன் கீர்த்தி பாண்டியன் இந்தப் படத்தில் இந்திரா என்னும் கதாபாத்திரத்தில் கேப் ஓட்டுநராக நடித்திருக்கிறேன். இந்நிலையில் இப்படத்தின் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எனக்கு ட்ரைவிங் என்றால் அவ்வளவு பிடிக்கும். நான் நடிக்க வந்திருக்காவிட்டால் கண்டிப்பாக கார் ரேஸ் வீராங்கனையாக ஆகியிருப்பேன். எனக்கு எப்போதுமே ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் என் தந்தைதான் எனக்கு ஹீரோ” என்று பேசியிருக்கிறார்.
