தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பெரும் புகழ் பெற்றவர் இசையமைப்பாளர் அனிருத். சமீபமாக அவரும் ஒரு பிரிமியர் கிரிக்கெட் லீக் அணியின் பெண் உரிமையாளரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்ற வதந்திகள் மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின.

இதனைக் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அனிருத், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். “திருமணமா… அமைதியாக இருங்கள் நண்பர்களே… வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என்று அவர் தெரிவித்தார்.
முந்தைய காலங்களிலும் அனிருத்தை பற்றிய காதல் மற்றும் திருமண சம்பந்தமான வதந்திகள் பரவியிருந்தன. ஆனால், அவற்றை அவர் எப்போதும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்த முறையில், அவர் நேரடியாகவே மறுப்பு தெரிவித்திருக்கிறார். தற்போது 34 வயதான அனிருத், இன்னும் ‘பேச்சுலர்’ ஆகவே உள்ளார். தற்போது தமிழ் மொழியில் ‘கூலி’, ‘மதராஸி’, ‘லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி’, ‘ஜனநாயகன்’, ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட படங்களுக்கும், தெலுங்கில் ‘கிங்டம்’, ‘மேஜிக்’, ‘தி பாரடைஸ்’ உள்ளிட்ட படங்களுக்கும், ஹிந்தியில் ‘கிங்’ திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.