குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், இந்தப் படத்தின் அறிவிப்புடன் டைட்டிலையும் வெளியிட வேண்டும் என்று விரும்புவதால், இயக்குநர் குழு அதற்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
முன்னதாக சரண், சிறுத்தை சிவா, வினோத் ஆகிய இயக்குநர்களுடன் வேலை செய்த அஜித், இப்போது ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைய உள்ளார். எனினும், படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் கழித்துதான் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போதைய கார் ரேஸ் திட்டங்களை முடித்த பிறகு மட்டுமே சினிமா வேலைகளில் பங்கேற்பேன் என்ற முடிவில் அஜித் உறுதியாக இருக்கிறாராம். இப்படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றுவது உறுதியானது.