சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் யோகலட்சுமி. இந்த திரைப்படம் வெளியான நாள் முதல் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

இந்நிலையில், நடிகை யோகலட்சுமி சினிமாவில் பெண்களுக்கு பல சிரமங்கள் உள்ளன என கூறியுள்ளார். அதைப்பற்றி அவர் கூறியதாவது,”சினிமா துறையில் பெண்களுக்கு சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சில நேரங்களில் சிலர் தவறாக கேட்பது போன்ற சூழ்நிலை உருவாகலாம். இருந்தாலும், நாம் யாராக இருக்கிறோமோ அதேபோல நிம்மதியாக இருக்க வேண்டும். எதையாவது செய்ய வேண்டாம் என்று ஒரு முடிவெடுத்தோம் என்றால், அந்த முடிவில் உறுதியாக நிலைத்து இருக்க வேண்டும். இதுவே முக்கியமானது,” என்று தெரிவித்துள்ளார்.
யோகலட்சுமி தெரிவித்த இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பாராட்டை பெற்றுக் கொண்டுள்ளன.