தெலுங்கு திரைப்படங்களில் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக இருந்த சுனில், ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்தார். தற்போது அவர் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ படத்தில் காமெடியிலும், ‘புஷ்பா’, ‘மாவீரன்’ போன்ற படங்களில் வில்லனாகவும் திறமையாக நடித்திருந்தார்.

‘மார்க் ஆண்டனி’, ‘குட்பேட் அக்லி’ போன்ற திரைப்படங்களில் அவருக்கு சிறந்த கதாபாத்திரங்கள் அமைந்தன. தற்போது விஜய் மில்டன் தமிழ் மற்றும் தெலுங்கில் இணைந்து இயக்கும் புதிய திரைப்படத்தில் சுனில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திலும் எதிர்மறையான தன்மை கொண்ட, மாறுபட்ட கதாபாத்திரமாக அவர் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரி ஒரு போலீசாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ராஜ் தருண், இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவர்களுடன் பரத் ஆகியவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் தலைப்பு ஜூன் 15ஆம் தேதி வெளியிடப்படும் என விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.