பாலிவுட்டின் பிரபல இளம் நடிகையாக வளரும் அனன்யா பாண்டே, ‘ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2’, ‘காலி பீலி’, ‘கெஹ்ரையான்’, ‘லைகர்’, ‘டிரீம் கேர்ள் – 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் ‘கேசரி சாப்டர் 2’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஒரு சமீபத்திய பேட்டியில் ஷாருக்கானைப் பற்றி தனது எண்ணங்களை பகிர்ந்த அனன்யா, “ஷாருக்கான் எனக்கு இரண்டாவது தந்தை போன்றவர். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில்நுட்ப வாழ்க்கையையும் மிக அழகாக சமாளிக்கக்கூடியவர். நான் சிறு வயதில் இருந்தபோதே, அவர் ஆர்யன், சுஹானா மற்றும் அப்ராம் மீது காட்டும் அன்பையும், அற்புதமான பெற்றோராக அவர் இருப்பதையும் நேரில் பார்த்திருக்கிறேன்.
அவர் யாருடன் பேசினாலும், அந்த நபர் உலகத்தில் ஒரே முக்கியமான நபர் எனவே உணர செய்வார். அவர் என் சிறந்த தோழியின் அப்பா என்பதால், நாங்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளை அவருடன் சேர்ந்து காண்போம்,” எனத் தெரிவித்தார்.