நடிகர் அமீர்கான் தற்போது ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் கூடைப்பந்து பயிற்சியாளராக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஜெனிலியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர். எஸ். பிரசன்னா இயக்கிய இந்த திரைப்படத்தை, அமீர்கான் மற்றும் அபர்ணா புரோஹித் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு, தனது கனவுப் படமான அமைந்துள்ள ‘மகாபாரதம்’ படத்தின் பணிகளை ஆரம்பிக்க உள்ளார் அமீர்கான். ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட போது, அவர் ‘மகாபாரதம்’ திரைப்படம் தான் தனது கடைசி படமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “மகாபாரதத்தை உருவாக்குவது எனது கனவாகும். ‘சித்தாரே ஜமீன் பர்’ வெளியான பிறகு, அதற்கான பணிகளைத் தொடங்குவேன். மகாபாரதத்தை எடுத்த பிறகு, அதற்கும் மேல் வேறு ஒன்றை செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றும். இருப்பினும், என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை என தெரிவித்தார்.மேலும் அமீர்கான் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.