‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசை உலகின் மன்னராக திகழ்கிறார்.
சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை அரங்கேற்றியதின் மூலம் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில், அவர் இசையமைக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’ என பெயரிடப்பட்டுள்ளது.
தனபால் பத்மநாபன் இயக்கும் இப்படத்தில், நடிகர் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது மட்டுமல்லாது, ‘தட்டுவண்டி’ என்ற மற்றொரு படத்திற்கும் இளையராஜா இசையமைத்து வருகிறார். விஜயபாஸ்கர் எழுதி இயக்கும் இந்த படத்தை, சர்வைவல் பிக்சர்ஸ் சார்பில் ஆர் எம் நானு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.