மலையாள திரையுலகில் நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் பதவியில் இருந்தார். ஆனால் கடந்த ஆண்டில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகியதும், மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையின் விளைவாக, நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த சில உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து சிலர் கைது செய்யபட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், மோகன்லால் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து தனது தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். தற்போது இந்த நடிகர் சங்கத்தின் பொறுப்புகளை அரசு நியமித்த தற்காலிக குழு ஒன்றே கவனித்து வருகிறது.
இந்நிலையில், மீண்டும் நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடத்தலாமா என்பதை தீர்மானிக்க ஜூன் 22ஆம் தேதி ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. அதே சமயம், மோகன்லால் மீண்டும் தலைவர் பதவிக்கு வர விரும்பம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மோகன்லாலை மீண்டும் தலைவராக விரும்பினாலும், கடந்த முறையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் அதேபோல் தொடர வேண்டும் என்பது அவர் விதித்துள்ள முக்கிய நிபந்தனை என கூறப்படுகிறது. இதுகுறித்த முழுமையான தகவல்கள் ஜூன் 22ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.