நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா திருமணம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் சாய் தன்ஷிகா தனது நடிப்பைத் தொடருவார் என விஷால் அறிவித்துள்ளார். தற்போது, அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘யோகிடா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவர் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அடுத்து, திரைப்படக் கல்லூரி மாணவரான அசோக் குமார் இயக்கவுள்ள, இன்னும் தலைப்பிடபடாத புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் மையக்கரு என்னவென்றால் ஒருவரின் ஆழமான மன அமைதி மற்றும் மனோதத்துவ ரீதியான அணுகுமுறையே கொள்ளப்பட்டுள்ளது. இப்படத்தில் தன்ஷிகாவுடன் கீதா கைலாசம், சிம்ரன் குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளான ஜாலிபாய் மற்றும் டிகிலிபூர் பகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனுடன், சமீபத்தில் நாகா இயக்கத்தில் தன்ஷிகா நடித்த ‘ஐந்தாம் வேதம்’ என்ற வெப் சீரிஸ் பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.