நடிகர் பரத் நடிப்பில் கடைசியாக வெளியான “காளிதாஸ்”, “மிரள்” போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவர் தற்போது கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில், தெலுங்கு சினிமாவின் இளைய கதாநாயகனாக விளங்கும் ராஜ் தருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. மேலும் இது, விஜய் மில்டனின் “கோலி சோடா” பட தொடரின் அடுத்த கட்டமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இப்படத்தில் ஏற்கனவே பாடகர் பால் டப்பா மற்றும் நடிகர் ஆரி இணைந்திருந்த நிலையில், தற்போது நடிகர் பரத் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.