Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

எனக்கு இயக்குனர் ஆகவேண்டும் என்ற எண்ணம் இல்லை…ஆனால்… யோகி பாபு OPEN டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான யோகி பாபு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், அவரது சினிமா பயணத்தை குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், சுந்தர்.சி. சார்தான் என்னை இந்த உயரத்துக்கு அழைத்துச் சென்றவர். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கே இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கவில்லை. ஆனால், நான் எழுத்தில் அதிக ஈடுபாடு உள்ளவனாக இருந்தேன். வசனங்களை எழுதி வந்தேன். எழுத்தாளர் சங்கத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக உறுப்பினராகவும் உள்ளேன். எனவே, எனது எழுத்து திறனைப் பயன்படுத்தி கதைகள் எழுதி வழங்க தயார்.

ஆனால், நான் ஒரு திரைப்படத்தை இயக்க விரும்புவதில்லை. ஆரம்பத்தில் எனது கனவு சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்பதே. எனது வாழ்க்கையில் நடிகராக உருவெடுக்க காரணமானவர் ராம்பாலா சார். அவரின் ஊக்கத்தாலும் வழிகாட்டுதலாலும் தான் இன்று நான் ஒரு நடிகராக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News