தெலுங்குத் திரையுலகில் பிரபலமான இளம் நடிகை ஸ்ரீலீலா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வருவதுடன், சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில், ஸ்ரீலீலா சில குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தும் வருகிறார். சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், சமீபத்தில் மணமகள் அலங்காரத்தில் தோன்றும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

அந்த புகைப்படங்களில், ஸ்ரீலீலா மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டு இருப்பதோடு, சிலர் அவரது கன்னத்தில் மஞ்சள் தடவி இருப்பது போல் புகைப்படங்கள் வெளியாகின. மேலும், இன்று எனக்கு ஒரு முக்கியமான நாள். விரைவில் முழு விவரங்களையும் உங்களுடன் பகிர்கிறேன். விரைவில் வருகிறேன் என அவர் பதிவிட்டதையடுத்து, அவர் திருமணம் செய்யவிருக்கிறாரா என்ற கேள்விகள் செய்திகளாக பரவின.
இந்த சூழ்நிலையில், ஸ்ரீலீலா அந்த புகைப்படங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது வீட்டில் நடைபெற்ற ஒரு கொண்டாட்டம் குறித்தே அந்த புகைப்படங்கள் என்பதையும், என் பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டங்களை நாங்கள் வீட்டிலேயே இப்படி கொண்டாடுவோம். இந்த கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் என் அம்மா செய்திருந்தார் எனக் கூறியுள்ளார். இந்த தகவல் அவரை குறித்த திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும், ஸ்ரீலீலா வரும் ஜூன் 14ஆம் தேதி தனது 24வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.