2017 ஆம் ஆண்டு வெளியான ‘குரங்கு பொம்மை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நித்திலன் சுவாமிநாதன். அந்தப் படத்தில் விதார்த் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதன் பின்னர், அவர் கடந்த ஆண்டு ‘மகாராஜா’ என்ற படத்தை இயக்கினார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் 190 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. மேலும், சீன மொழியிலும் இப்படம் வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஆஸ்கார் விருது பெற்ற ‘பேடு மேன்’ திரைப்படத்தின் எழுத்தாளர் அலெக்சாண்டர் டினெலாரிஸ், இயக்குநர் நித்திலனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நித்திலன். அதில், இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. என்னை நேரில் அழைத்து அன்பை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.