இயக்குநர் சசியின் இயக்கத்தில் மீண்டும் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில், ‘லப்பர் பந்து’ மற்றும் ‘மாமன்’ ஆகிய படங்களில் நடித்த மலையாள நடிகை சுவாசிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் விஜய் ஆண்டனி மற்றும் அஜய் இணைந்து இரட்டை ஹீரோக்களாக நடிக்கும் ஒரு படம் எனப்படுகிறது.
இப்படத்தின் கதை தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் நிகழ்ந்த உணர்ச்சியால் நிரம்பிய ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த படம் ‘பிச்சைக்காரன்’ படத்தின் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.