அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. மேலும், இது பல பிரபலங்களிடமும் பாராட்டுகளைக் பெற்றுள்ளது.
இந்தப் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், அனிருத் உள்ளிட்ட பலரும் பாராட்டி இருந்தனர். தற்போது, தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் எஸ்.எஸ். ராஜமவுலியும் இப்படத்தை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில், “‘டூரிஸ்ட் பேமிலி’ ஒரு அற்புதமான திரைப்படம். படம் தொடங்கிய தருணத்திலிருந்தே இறுதிவரை என் கவனத்தை ஈர்த்தது. அபிஷன் ஜீவிந்த் மிகச் சிறப்பாக எழுதி, இயக்கியுள்ளார். இது ஒரு சிறந்த சினிமா அனுபவம். இப்படத்தை தவறவிடாதீர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.இதற்கு பதிலளித்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், “மிக்க நன்றி எஸ்.எஸ். ராஜமவுலி சார். உங்கள் வார்த்தைகள் இந்த நாளை எனக்கு சிறப்பாக மாற்றிவிட்டது. நன்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.