மலையாள சினிமாவின் பிரபல நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் விஷாலுடன் நடித்த ‘ஆக்சன்’ படம் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் ‘ஜெகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1 மற்றும் 2, ‘கட்டா குஷ்தி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது நடிகர் சூரியுடன் இணைந்து ‘மாமன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட இந்த ‘மாமன்’ திரைப்படம், மே 16ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர் சூரி குறித்து பேசும்போது, “சூரி சாருடன் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. ஏனெனில், அவர் ஒரு மிக நேர்மையான மனிதர். அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்லதற்கே உதவுகிறது. அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பும் மரியாதையும் காணப்படுகிறது. அவருடன் நடித்த அனுபவம் எனக்கு பெருமையான ஒன்று” என தெரிவித்துள்ளார்.