Touring Talkies
100% Cinema

Wednesday, May 7, 2025

Touring Talkies

‘அம்பி’ திரைப்படம் சொல்லவருவது இதுதான் – நடிகர் ரோபோ ஷங்கர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி ஆகியோரை தொடர்ந்து காமெடி நடிகராகக் கலக்கிய ரோபோ சங்கர், ‘அம்பி’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில் பாடல், சண்டைக் காட்சி உள்ளதா என்ற கேள்விக்கு ரோபோ சங்கர் கூறிய பதில்: “ஆம், இதில் அனைத்தும் இருக்கிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளுக்காக முன்பே நன்கு தயார் ஆனேன். நிறைய ரிகர்சல்கள் பார்த்தோம். மொத்தம் மூன்று சண்டைக் காட்சிகள் எடுத்தோம். இந்தப் படத்தில் ஹீரோவாக நீங்கள் நடிக்க வேண்டும் என இயக்குநர் என்னிடம் கூறவில்லை. கதையை கூறினார். அந்தக் கதையில் வரும் 40 வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்று எண்ணி, நான் தான் நடிக்க முடிவு செய்தேன்.”

“அந்தக் கதையை கேட்டு நடிக்கத் தயார் ஆனேன். இளம் வயதிலேயே தாத்தா ஆனேன் என்பது எனக்கு கடவுளால் தரப்பட்ட ஆசீர்வாதம். என் குடும்பத்துடன், பேரனுடன் செலவழிக்கும் நேரம் எனக்கு மிகவும் மதிப்புள்ளதும் மகிழ்வானதுமானதாக இருக்கிறது. இப்படத்தில் என் கதாபாத்திரமான ‘அம்பி’ மிகவும் சாதுவானவனாக இருக்கிறான். ஆனால் அவனால் செய்யப்படும் சில செயற்பாடுகள் எதிர்க்கட்சிக்குத் திடீர் விளைவுகளை ஏற்படுத்தும். இப்படியான சூழ்நிலையைப் பற்றிய படமே இது” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News