2022ஆம் ஆண்டு மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்துக் வெளியான படம் ‘ஜன கன மன’ ஆகும். அரசியல் நோக்கங்களுக்காக நடந்ததாக கூறப்படும் போலி என்கவுண்டரை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதில் குறிப்பிடத்தக்க விசேஷம் என்னவெனில், இந்தப் படத்தில் காட்சியிடப்பட்டிருந்த என்கவுண்டர் சம்பவம், ஆந்திராவில் ஒரு இளம்பெண்ணின் மரணத்திற்காக நடத்தப்பட்ட என்கவுண்டரின் நிகழ்வைப் போலவே இருந்தது. ஆனால் இதில், அந்தச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட போலி சூழ்நிலை இருந்தது என்பதையும் இணைத்து படம் உருவாக்கியிருந்தனர்.

இந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்திய ‘ஜன கன மன’ படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கும் என்று படம் வெளியுவதற்கும் முன்பே இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அறிவித்திருந்தார். மேலும், முதல் பாகத்தில் இடம் பெறாத சில காட்சிகளை டீசராக வெளியிட்டும் இருந்தார். இப்படம் வெற்றியை பெற்ற பிறகு, இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வந்தனர். நேற்று இப்படம் திரைக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு, படத்தின் நாயகன் பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரமான ‘அரவிந்த் சுவாமிநாதன் தொடர்கிறார்’ என்ற வாசகத்துடன் சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வெளியிட்டு இரண்டாம் பாகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
‘ஜன கன மன’ படத்திற்கு பிறகு, நிவின்பாலியை வைத்து டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய ‘மலையாளி பிரம் இந்தியா’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதன் பின்னர், தனது நிலையை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர் மீண்டும் ‘ஜன கன மன’ இரண்டாம் பாகத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் எனத் தெளிவாக தெரிகிறது.