தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இதுவரை ஹாரர் படங்களில் நடித்திருக்காத அவர், தற்போது அந்த வகையில் நடிக்க முடிவுசெய்துள்ளார். இதன் படி, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, ஸ்ட்ரீ 2, முஞ்யா போன்ற ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு ‘தாமா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘முஞ்யா’ படத்தை இயக்கிய ஆதித்யா சர்போத்தர் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ஆயுஷ்மான் குரானா நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு தொடங்கியதாகவும், அங்கு இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.