Touring Talkies
100% Cinema

Monday, April 28, 2025

Touring Talkies

‘THUDARUM’ திரைப்படம் எப்படி இருக்கு ? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மனைவி ஷோபனா, கல்லூரியில் பயிலும் மகன் மற்றும் பள்ளி செல்லும் மகளுடன் இனிய குடும்ப வாழ்க்கை நடத்தி வரும் மோகன்லால், ஒரு டாக்ஸி டிரைவராக பணியாற்றுகிறார். குடும்பத்தினரை விட அவர் தனது பழைய அம்பாசிடர் காரின் மீது மிகுந்த பாசத்துடன் நேசித்து வருகிறார். ஒருநாள், அவரது மகன் மற்றும் நண்பர்கள் அவரின் அறிவில்லாமல் அந்த டாக்ஸியை பயன்படுத்தியதால், கோபத்தில் மகனை அடிக்கும் வரை காரின் மீது கொண்ட காதல் வெளிப்படுகிறது.

ஒரு காலத்தில் சென்னையில் சினிமா உலகில் பைட்டராக இருந்த மோகன்லால், அப்போது தனது குருநாதராக இருந்த பாரதிராஜா இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு சென்னை சென்று திரும்புகிறார். அவர் திரும்பி வரும்போது, வேலைக்காக ஒர்க்ஷாப்பில் விட்டிருந்த அவரது டாக்ஸியை, அங்கு வேலை பார்த்த இளைஞன் ஒருவர் கஞ்சா கடத்தியதாக போலீசில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதனால் டாக்ஸி பறிமுதல் செய்யப்படுகிறது, ஆனால் அந்த இளைஞன் ஓடி மறைந்து விடுகிறார். திமிர் பிடித்த எஸ்.ஐ. பினு பப்பு, டாக்ஸியை திருப்பிக் கொடுக்க மறுக்கிறார்.

தினமும் டாக்ஸியைப் பெற போலீஸ் ஸ்டேஷனை அலைந்து திரியும் மோகன்லால், ஹாஸ்டலில் தங்கி இருக்கும் தனது மகனிடம் பேச முயன்ற போது, மகன், நண்பர்களின் முன்னிலையில் அவமானப்பட்டதை நினைத்து, அவரிடம் பேச மறுக்கிறார்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வர்மா பணியில் சேர்கிறார். அவர், மோகன்லாலின் டாக்ஸியை விடைக்குமாறு எஸ்.ஐ.யிடம் உத்தரவிடுகிறார். அதே நேரத்தில், போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஒருவர் நடத்திய திருமண நிகழ்விற்கு செல்லும் போதும் திரும்பி வரவும் உதவுமாறு மோகன்லாலிடம் இன்ஸ்பெக்டர் கேட்கிறார். தனது டாக்ஸியை மீட்டுக்கொண்ட மகிழ்ச்சியில் மோகன்லால் ஒப்புக்கொண்டு அவர்களை அழைத்துச் செல்கிறார்.

ஆனால் அங்கு சென்றதும், இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., மோகன்லாலை வற்புறுத்தி, காட்டில் நடக்கும் விசேஷ விழாவை காண அழைத்துச் செல்கிறார்கள். செல்லும் நேரத்தில், மோகன்லாலின் டாக்ஸியின் டிக்கியில் அவர்களால் மறைக்கப்பட்ட ஒரு சாக்குப் பையில் ஒரு மனித உடல் இருந்தது என்பது பின்னர் தெரிய வருகிறது. தன்னும் தன்னுடைய டாக்ஸியும் இந்த கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் மோகன்லால் புரிந்துகொள்கிறார்.

இதனால் மோகன்லால் மனஉளைச்சலில் ஆழ்கிறார். இதற்கிடையில் ஹாஸ்டலில் தங்கி இருந்த அவரது மகன் காணாமல் போனது பற்றிய தகவலும் அவரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இன்ஸ்பெக்டர் டாக்ஸியை ஒப்படைத்ததிலிருந்து, அதன் மூலம் ஒரு கொலை செய்யப்பட்ட உடலை கடத்தினதுவரை, மேலும் தனது மகன் காணாமல் போனதுவரை அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பார்த்த மோகன்லாலுக்கு, தனக்கு எதிராக ஒரு பெரிய சதி நடந்திருப்பது தெரிகிறது.

அது என்ன சதி? அவரது மகன் எங்கே? இன்ஸ்பெக்டர் யாரை கொலை செய்தார்? இவை அனைத்தும் மோகன்லால் வாழ்க்கையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தின என்பதை தொடர்ந்து வரும் கதையில் விவரிக்கப்படுகிறது.’த்ரிஷ்யம்’ படத்திற்குப் பிறகு, ரசிகர்கள் மோகன்லாலிடம் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு வைத்திருந்தார்களோ, அதேபோல் அவர் இந்த படத்தில் மீண்டும் வந்துள்ளார் என்று கூற வேண்டும். குடும்பத்தின் நலனுக்காக ஒரு சாதாரண மனிதராக இருந்து, சூழ்நிலைக்கு ஏற்ப ருத்ரமூர்த்தியாக மாறும் மோகன்லாலின் பயணத்தை, தனது நடிப்பின் பரிமாணத்தின் மூலம் திறம்பட காட்டியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ இருவரிடமும் மாட்டிக்கொண்டு தவித்து கார் ஓட்டும் காட்சிகளில், அவரது மனவேதனை மிகவும் இயல்பாக பிரதிபலிக்கிறது. குறிப்பாக, பாத்ரூமில் ஷவரை திறந்து நனைந்து கொண்டு கதறி அழும் காட்சி நம் மனதை உருக்கும் அளவுக்கு உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. அதேபோல், கடைசி அரை மணி நேரத்தில் அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் திரையரங்கில் விசில் பறக்க வைக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷோபனா, மோகன்லாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். வயதானாலும், அவரது நடிப்பில் சிறிதும் குறைபாடு இல்லை. குறிப்பாக, இன்ஸ்பெக்டரை தனது கணவர் மிரட்டும் போது, அதன் எதிரொலியாக பின்வாங்கும் இன்ஸ்பெக்டரை பார்ப்பதற்காக அவர் கொடுத்த பார்வை, ‘மணிசித்திரதாழ்’ படத்தில் நடித்த கங்காவின் பார்வையை நினைவுபடுத்துகிறது. அந்த ஒரு காட்சியே அவரது நடிப்பின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.

- Advertisement -

Read more

Local News