தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக விளங்கும் நாக சைதன்யா மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவி இணைந்து நடித்த ‘தண்டேல்’ படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி, உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
கார்த்திக் தண்டு இயக்க உள்ள நாக சைதன்யாவின் 24வது திரைப்படத்தை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனம் மற்றும் ‘புஷ்பா’ படத்தின் இயக்குனரான சுகுமாரின் நிறுவனம் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்து வருகின்றன.
இந்நிலையில், புராணக்கதை சார்ந்த ‘என்சி24’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை குறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து நாக சைதன்யா தனது எக்ஸ் பக்கத்தில், “எரிக்கப்பட்ட ரகசியங்கள், காலத்தை கடந்த ஒரு புராணக் கதை திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது” என பதிவு செய்துள்ளார்.