தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘ரெட்ரோ’ என்ற தமிழ் திரைப்படம் மே 1ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சமூக வலைதளங்கள் மற்றும் நிஜ வாழ்க்கை என்பது இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. முகம் தெரியாமல் இருக்கும் சிலரால் நானும் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளேன். நானும் ஒரு சாதாரண மனிதர் தான். ஆனால் அவர்கள் சொல்வது எல்லாம் உண்மையல்ல என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு இன்ஸ்டாகிராமில் 30 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அந்த எண்ணிக்கை எல்லாம் 30 மில்லியன் சினிமா டிக்கெட்டாக மாறும் என்று சொல்ல முடியாது.
அதே நேரத்தில், சில சூப்பர் ஸ்டார்கள் வெறும் 5 மில்லியன் பாலோயர்களையே வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு கூட்டமாக வருகிறார்கள். நாம் செய்யும் வேலையை நேர்மையாகச் செய்வது தான் முக்கியம். அதற்கான கருத்துக்களை நேரடியாக மக்களிடமிருந்து பெறுவது தான் உண்மையான மகிழ்ச்சி,” என்று பூஜா தெரிவித்துள்ளார்.