நடிகை ஷனாயா கபூர், தனது முதல் திரைப்படம் கைவிடப்பட்டதுக்குப் பிறகு, தற்போது இயக்குநர் சந்தோஷ் சிங் இயக்கும் ‘ஆன்கோன் கி குஸ்தாகியான்’ என்ற படத்தில் விக்ராந்த் மாஸ்ஸியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்ற நிலையில், ஷனாயாவின் அடுத்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2012ஆம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளியான ‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர்’ திரைப்படம் வெற்றி பெற்றது. பின்னர் 2019ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகம் புனித் மல்கோத்ரா இயக்கத்தில் வெளிவந்தது.
தற்போது இந்த தொடரின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளது. இது ஒரு வெப் தொடராக உருவாகி, அதில் 6 எபிசோடுகள் இடம்பெறும். இந்த வெப் தொடரை இயக்குநராக அறிமுகமாகும் ரீமா மாயா இயக்கவிருக்கிறார். இதில் ஷனாயா கபூர் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்றும், எதிர்வரும் 20ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.