‘நாடோடிகள்’, ‘சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற திரைப்படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகை அபிநயா, சமீபத்தில் மலையாள திரைப்படமான ‘பணி’ படத்தில், ஜோஜு ஜார்ஜின் மனைவியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நடிகை அபிநயா விரைவில் தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், அதற்கான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், அவரது காதலன் யார் என்பது இதுவரை வெளிவரவில்லை, இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அவருக்கு பேச்சு மற்றும் செவித்திறன் இல்லாத போதிலும், அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக, அவர் சுந்தர் சி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.