அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், நடிகர் அருண் விஜய்யின் திரைப்பட கரியர் மிகுந்த உயர்வைப் பெற்றது. அதன் பிறகு, அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது, திரைத்துறையில் அவருக்கென ஒரு தனி இடம் உருவாகியுள்ளது. என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு, பெரும்பாலான வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதை அருண் விஜய் தவிர்த்து வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இதையடுத்து, தற்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக, இயக்குநர் சுந்தர்.சி அவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், இதுவரை அவர் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என கூறப்படுகிறது.