பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து, கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார். அவற்றுடன் சேர்ந்து இரும்புக்கை மாயாவி என்ற புதிய படத்தையும் இயக்கவிருக்கிறார்.
தற்போது இவரிடம் மூன்று பெரிய திரைப்பட ஒப்பந்தங்கள் உள்ளன. அவை அனைத்தையும் முடித்தவுடன், தனுஷ் உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனுஷை சந்தித்த லோகேஷ், அவருக்கு ஒரு கதையை சொல்லியதாக கூறப்படுகிறது. அந்த கதை தனுஷிற்கு பிடித்ததால், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் இப்படம் உருவாகும் என்று கூறப்படுகிறது.
இன்னும் தனுஷின் கைவசம் பல பெரிய படங்கள் உள்ளன. அவற்றை முடித்தவுடன், லோகேஷ் – தனுஷ் கூட்டணி உறுதியாகும் என்று எதிர்பார்க்கலாம்.