Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சிங்கத்துடன் மோதும் மகேஷ் பாபு… ராஜமெளலி காட்டவுள்ள பிரம்மாண்டம்… இதுதான் #SSMB29 கதைக்களமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்த ‛ஆர் ஆர் ஆர்’ படத்தை இயக்கிய ராஜமௌலி, தனது அடுத்த படத்தை மகேஷ்பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து நடிக்கும் கதையுடன் இயக்கத் தயாராகி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், சமீபத்தில் ராஜமௌலி ஒரு சிங்கத்துடன் இணைந்து வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டார். அதில், கென்யாவில் தனது அட்வென்ச்சர் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதை அறிவித்தார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதுடன், மகேஷ்பாபு தனது ‛போக்கிரி’ படத்தின் வசனத்தை கொண்டு பதில் அளித்தார். அவரின் மனைவி நர்மதா, அந்த வீடியோவிற்கு கைத்தட்டும் எமோஜிகளை பதிலளித்தார்.

இந்த வீடியோ, ராஜமௌலியின் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவும், விலங்குகளை மையமாகக் கொண்டு உருவாகும் கதையாகவும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில், மகேஷ்பாபு மற்றும் சிங்கம் இடையே சண்டைக் காட்சிகள் இடம்பெறவுள்ளன. பெரும்பகுதி படப்பிடிப்பு கென்யாவின் காடுகளில் நடைபெறவுள்ளது. இப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்க, பி. எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

- Advertisement -

Read more

Local News