Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

கேம் சேஞ்சர் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்தது தெலுங்கானா அரசு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அல்லு அர்ஜுன் நடித்து கடந்த மாதம் வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் பிரிமியர் காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநிலம் இனி சிறப்புக் காட்சிகளுக்கும், டிக்கெட் கட்டண உயர்வுக்கும் அனுமதி கிடையாது என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.

இந்த சூழலில், நாளை வெளியாக உள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு சிறப்புக் காட்சிகளுக்கும், கட்டண உயர்வுக்கும் அனுமதி கிடைக்குமா என தயாரிப்பாளர் தில் ராஜு ஆவலுடன் காத்திருந்தார். இதனால், ஆந்திர மாநில முன்பதிவுகளையும் அவர் தற்காலிகமாக நிறுத்தியிருந்தார்.

நேற்று இரவு, தெலுங்கானா அரசு இத்தகைய அனுமதிகளை அறிவித்தது. ஆனால், நள்ளிரவு 1 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதிகாலை 4 மணி காட்சிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. டிக்கெட் கட்டண உயர்விற்காக, மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 150 ரூபாய், சிங்கிள் தியேட்டர்களில் 100 ரூபாய் வரை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டது. இதுவே முதல் நாள் மட்டும் பொருந்தும் கட்டணம். இரண்டாவது நாள் முதல் பத்து நாட்கள் வரை, மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 100 ரூபாய் மற்றும் சிங்கிள் தியேட்டர்களில் 50 ரூபாய் அதிகரிக்க அனுமதி கிடைத்தது.

ஆந்திர மாநிலத்தில், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 175 ரூபாயும், சிங்கிள் தியேட்டர்களில் 135 ரூபாயும் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜனவரி 23 வரை செல்லும். மேலும், அதிகாலை 1 மணி காட்சிக்கான கட்டணம் 600 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 14 நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டதை, 10 நாட்களுக்கு குறைத்து ஆந்திர உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, பொதுநல வழக்கில் ஒருவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நடந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News