Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

பராரி பட கதாநாயகியை தேர்வு செய்ய 2000 பேரிடம் ஆடிசன் செய்தேன் – இயக்குனர் எழில் பெரியவெடி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் எழில் பெரியவெடி இயக்கியுள்ள படம் ‘பராரி’. ராஜூமுருகனின் உதவியாளர் எழில் பெரடி இயக்கிய இந்த படத்தில் புதுமுகங்கள் ஹரி, சங்கீதா, புகழ் மகேந்திரன் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருப்பதுடன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையை அமைத்துள்ளார். வரும் 22ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதை முன்னிட்டு, படத்தின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் எழில் பேசுகையில், “இந்தக் கதையை ‘ஜிப்ஸி’ படத்தில் பணியாற்றிய காலத்திலேயே எழுதி முடித்துவிட்டேன். நான் பிற தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது, ராஜூமுருகன் சார் வெளியே காத்திருப்பார். அவரிடம் உள்ள ஆதரவோடு, நான் இந்த படத்திற்கான கதையை பலரும் கேட்டனர். ஆனால், எவரும் தயாரிக்க தயார் இல்லை. இறுதியில், ராஜூமுருகன் சார் ஹரியை இணைத்து, இருவரும் இணைந்து படத்தைத் தயாரித்தனர்.

இந்தப் படத்திற்காக ஹரி எடையைக் குறைத்தார். திருவண்ணாமலை மக்களையும் கதைக்கேற்ப நடிக்க வைத்தோம். அனைவருக்கும் முழு முயற்சிகளுடன் ரிகர்சல் கொடுத்தோம். ‘ஜோக்கர்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுடன் எனக்கு நல்ல பழக்கம் உள்ளது. பாடலாசிரியர் உமாதேவியும் இணைந்து, இசை மற்றும் பாடல்களை அருமையாக உருவாக்கியுள்ளனர்.

கதைக்கு இயல்பான தமிழில் பேசும் நாயகியை தேடி, திருவண்ணாமலையில் அலுவலகம் அமைத்து 2,000 பெண்களை ஆடிசன் செய்தேன். ஆனால் சரியான நாயகி கிடைக்கவில்லை. இறுதியாக சங்கீதா வந்தார். அவர் மிக அழகாக மேக்கப்புடன் வந்ததால், எனது கதைக்கேற்ப கலைக்க சொல்லி அனுப்பினேன். பின்னர் அவர் வந்த போது கதையின் நாயகியை கண்டேன். அவர் பிரமாதமாக நடித்துள்ளார். ‘பராரி’ படத்தின் நோக்கம், நாமெல்லாரும் பூமியில் விருந்தினர்களாகவே இருப்பது. நம் இருப்பு இந்த பூமிக்கு ஒரு நல்ல விசயத்தைச் சொல்லி செல்ல வேண்டும் என்பதே. இது முழு குழுவின் பாடுபட்ட உழைப்பு. படத்தை உங்கள் அனைவரும் விரும்புவீர்கள்.” என்கிறார்.

- Advertisement -

Read more

Local News