Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

அமரன் படத்துக்காக எடுத்த காமெடி காட்சிகளை நீக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி… ஏன் தெரியுமா? #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ரங்கூன்’ படத்திற்கு பிறகு ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் ‘அமரன்’. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த இந்த படம், இதுவரை 300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காமெடி கலந்த காதல் மற்றும் குடும்ப கதைகளில் அதிகம் நடித்த சிவகார்த்திகேயனைக் கொஞ்சம் வித்தியாசமாக ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியிருக்கிறார் ராஜ்குமார்.

அந்த அனுபவத்தைப் பகிர்ந்த ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், “படத்தின் ஸ்கிரிப்ட் தயாரிக்கும்போது சில காமெடி காட்சிகளை சேர்த்திருந்தேன். ஆனால் படத்தைக் கடைசியாக எடிட் செய்யும் போது, அந்த காமெடியை நீக்கி விட வேண்டும் என்று நினைத்தேன். இதனால் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களைப்போல இந்தப் படம் தோன்றக்கூடாது.

அந்த மாற்றத்தால், முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையும் அவரது குடும்பத்தாரின் பிரச்சினைகளும் மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், அந்த காமெடி காட்சிகளை நீக்கியதால், சிவகார்த்திகேயனும் அடையாளம் மாறி, ஒரு வலிமையான ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். இல்லையெனில், இந்தப் படமும் அவருடைய வழக்கமான படங்களின் தொடர்ச்சியாகவே இருந்திருக்கும்,” என தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News