மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி, இப்போது பிரியங்கா உபேந்திரா என அழைக்கப்படுகிறார். 2003ல் கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்த இவர், பெங்காலி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘சூரி’ என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் ‘ராஜ்யம்’ என்ற படத்தின் மூலம் வந்த பிறகு ‘ராஜா’ படத்தில் அஜித் ஜோடியாக நடித்தார். இதைத் தொடர்ந்து ‘காதல் சடுகுடு’, ‘ஜனனம்’ போன்ற படங்களில் நடித்தார். 2004ம் ஆண்டு வெளியான ‘ஜனனம்’ தமிழ் திரையுலகில் அவர் நடித்த கடைசி படம்.
இப்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியங்கா தமிழில் திரும்புகிறார். கன்னடத்தில் நடித்து வரும் ‘உக்ரவர்ததா’ என்ற ஆக்ஷன் படம் தமிழில் ‘உத்ராவதாரம்’ என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. குருமூர்த்தி இயக்கிய இந்த படத்தில் அஜய், சுமன், பவித்ரா லோகேஷ், பவன் ஆச்சார்யா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரியங்கா ஒரு அதிரடி பெண் போலீசாக நடிக்கிறார். படம் அடுத்த மாதம் வெளிவரவுள்ளது, இதற்கான தமிழ் புரமோஷனுக்காக பிரியங்கா தற்போது சென்னை வந்துள்ளார்.