Friday, October 18, 2024

எப்போதும் நடிப்பீர்களா? இறுதி மூச்சு வரை நடிப்பேன் ஆக்‌ஷன் சொல்லுங்கள்… ஷாருக்கான் எமோஷனல் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு நடித்த மூன்று படங்களும் தலா ஆயிரம் கோடி வசூலித்துள்ளன. தற்போது, தனது மகள் சுஹானா கான் நடிக்கும் “கிங்” படத்தில் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.இந்தச் சூழலில், சுவிட்சர்லாந்தில் நடந்த திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு அவரிடம், “எப்போதும் நடித்துக்கொண்டிருப்பீர்களா?” என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “ஆமாம்… சாகும் நாள் வரை நடிக்கவேண்டும். யாராவது ‘ஆக்‌ஷன்’ சொல்ல வேண்டும், நான் சாக வேண்டும். ‘ஆக்‌ஷன்’ சொல்லியவர் ‘கட்’ சொல்லும்போது, நான் எழுந்திருக்கக் கூடாது. இதுதான் எனது வாழ்நாள் கனவு. ஆம், நான் எப்போதும் நடிப்பதையே விரும்புகிறேன்.

இறுதி மூச்சு வரை நடிப்பேன்; யாராவது ‘ஆக்‌ஷன்’ சொன்னபோது நான் சாகவேண்டும்…” என்று அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். நான் தீவிரமான நடிகர் இல்லை, ஆனால், நடிப்பின் சில அற்புதமான அம்சங்களை மக்களிடம் பகிர்ந்தேன். வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை நடிப்பின் மூலம் கொண்டாடுகிறேன். என்னைப் பொறுத்தவரை, எந்த வகையிலும் மகிழ்ச்சியை உருவாக்க முடியும். நான் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன், அன்பைக் கொடுத்தேன். கலை, ஓவியம், பாடல், இசை – இவை அனைத்தும் எனக்கு ஒன்றுதான். அவற்றில் எந்த விதமான வித்தியாசமும் இல்லை.

இரண்டு நிமிடங்களில் ஒருவரை மகிழ்விக்க முடிந்தால், அதுதான் அன்பு. ஒருவரை 50 ஆண்டுகள் அன்போடு சேர்ந்து வாழ முடிந்தால், அதுதான் பொழுதுபோக்கு. ஒருவரை 30 வினாடிகளில் மகிழ்விக்க முடிந்தால், அதுதான் படைப்பாற்றல். எனவே, ஒரே விஷயத்திற்கு வெவ்வேறு பெயர்களை காண்கிறேன். மேலும், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக ஒரே உணர்வுடன் மக்களை மகிழ்விக்கச் செய்கிறேன்,” என்று ஷாருக்கான் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News