அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா’ படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. புஷ்பா படத்துக்காகவே அவருக்கு இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் உத்தரப் பிரதேசம் அலிகார் பகுதியில் இருந்து ஹைதராபாத் வரை சைக்கிளில் அர்ஜூனை சந்திக்க 1600 கி.மீ. பயணம் செய்திருக்கிறார். இறுதியாக ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை நேரில் சந்தித்த அவர், நெகிழ்ச்சியுடன் தனது பயணம் குறித்துக் கூறியிருக்கிறார்.அவருக்கு பூச்செடியை பரிசாக வழங்கி இருக்கிறார் அல்லு அர்ஜூன். அதுமட்டுமின்றி அந்த ரசிகர் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு குறித்து இன்ஸ்டா பக்கத்தில் அந்த ரசிகர் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.
அல்லு அர்ஜுன்-ஐ காண 1600கி.மீ சைக்கிளில் பயணம் செய்த ரசிகர்… அன்பால் உறைந்த அல்லு அர்ஜுன்!
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more