Wednesday, October 16, 2024

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் பேச்சு பட நடிகர் தேவ் ராம்நாத்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில மாதங்களுக்கு முன் வெளியான’பேச்சி’ திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றதோடு, தற்போது ஒடிடி தளத்தில் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நாயகனாக நடித்த தேவ் ராம்நாத், அவரது திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது அவர் பல படங்களில், இணையத் தொடர்களில் ஒப்பந்தமாகி மிகவும் பிஸியாக இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு, ஆனால் அது எளிதான விஷயம் அல்ல என்பதை அறிந்தேன். இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும், ‘பேச்சி’ திரைப்படம் தான் எனது பெயரை மக்களிடம் கொண்டு சென்றது. இப்போது நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. நானும் எனக்கான வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தற்போதைய முன்னணி ஒடிடி தளத்திற்கான ஒரு இணையத் தொடரிலும், ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறேன். அதோடு, வெற்றி பட இயக்குநர்கள் நான்கு பேருடன் இணைந்து ஒரு புதிய படத்தைத் தயாரித்து அதில் நாயகனாக நடிக்கவுள்ளேன்.

தயாரிப்பாளராக இருப்பது என்னை ஒரு நாயகனாக முன்வைக்க உதவும் முயற்சி. அதற்காக நான் பல கோடிகளை செலவழிக்கப் போவதில்லை. என் சினிமா நண்பர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியில் தான் படத்தை உருவாக்க உள்ளேன். வாய்ப்புக்காக காத்திருந்தால் நேரம் மட்டும் கழியும்; அதனால் வாய்ப்பை உருவாக்கவே தயாரிப்பிலும் ஈடுபட முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News