Wednesday, October 16, 2024

படப்பிடிப்பில் இவரின் ஆதிக்கம் தான் அதிகம் இருந்தது.‌‌.. ‘டகோய்ட்: தி லவ் ஸ்டோரி’ படத்தில் இருந்து விலகினாரா ஸ்ருதிஹாசன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ருதிஹாசன் ‘டகோய்ட்: தி லவ் ஸ்டோரி’ எனும் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஆத்விசேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். சனைல் தியோ என்பவர் இயக்கும் இந்த படம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாக்கப்படுகிறது என தகவல் வெளியிடப்பட்டது. தற்போது, ஸ்ருதிஹாசன் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, அதன் பிறகு இந்த படத்திலிருந்து விலகி விட்டார் என்ற தகவல் கசிந்துள்ளது.

படம் துவங்கிய போது, ஸ்ருதிஹாசன், ஹீரோ ஆத்விசேஷுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துப் பின்பு, “இனிமையான ஷூட்டிங் அனுபவம்” என்று சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். ஆனால், படப்பிடிப்பின் போது, இயக்குனர் இருந்தாலும், நாயகன் ஆத்விசேஷின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. மேலும், ஸ்ருதிஹாசன் நடிக்க வேண்டிய காட்சிகளில் கூட அவர் குறுக்கீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த அனுபவத்தை ஏற்க முடியாததால், ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து விலகினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை, இயக்குனர் சனைல் தியோ உடன் இணைந்து ஆத்விசேஷ் எழுதியுள்ளார். இதனால், படப்பிடிப்பின் போது அவர் நினைத்தபடி காட்சிகள் அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், கூடுதல் உரிமையுடன் நடந்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் படத்திலிருந்து விலகியதற்கான தகவலும், அவருக்குப் பதிலாக வேறு நடிகை நடிப்பார் என்ற தகவலும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News