தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படுபவர் அர்ஜுன் சர்ஜா. 1981 ஆம் ஆண்டு வெளியான “சிம்ஹடா மரி சைன்யா” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானார். அதற்கு பின், 1984 ஆம் ஆண்டு வெளிவந்த “நன்றி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது முதல் படியாக அறிமுகமானார்.
1992 ஆம் ஆண்டு “சேவகன்” என்ற திரைப்படத்தை இயக்கி, அதில் தான் நடித்திருந்தார். இதுவரை 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, அவர் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை, அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நெஷனல் தயாரிக்கவுள்ளது. படத்தின் முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) போஸ்டரை நாளை காலை 10.08 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
அண்மையில், துருவ சர்ஜா நடிப்பில் வெளியான “மார்டின்” திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளர் அர்ஜுன். அதுமட்டுமின்றி, அஜித் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது தவிர, “தீயவர் குலைகள் நடுங்க” மற்றும் “அகத்தியா” போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.