Tuesday, October 15, 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விலகும் நடிகர் கிச்சா சுதீப்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி 2013-ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. அப்போதிலிருந்து கன்னட நடிகர் கிச்சா சுதீப்தான் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வருகிறார். அவர் தற்போது இந்தாண்டு பிக் பாஸ் சீசனுக்குப் பிறகு விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.இது குறித்து அவர், ” இத்தனை ஆண்டுகள் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. இந்த நிகழ்ச்சி மீதும் என் மீதம் எந்தளவுக்குக் காதல் வைத்திருக்கிறீர்கள் என்பதை டி.ஆர்.பி சொல்கிறது. 11 ஆண்டுகள் ஒன்றாகப் பயணித்தது சிறப்பான விஷயம். தற்போது இது எனக்கான நேரம். இதிலிருந்து விலகி தற்போது எனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதில் கவனம் செலுத்தவிருக்கிறேன். கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கும் கடைசி சீசன் இதுதான். என்னுடைய இந்த முடிவுக்கு சேனலும், பிக் பாஸ் ரசிகர்களும் மரியாதை கொடுப்பார்கள் எனத் தீர்க்கமாக நம்புகிறேன். இந்த சீசனை சிறப்பாக நடத்தி முடிப்போம். நான் நிச்சயமாக உங்களை என்டர்டெயின் செய்வேன்.” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News