கடந்த சில நாட்களாக நவராத்திரி விழாவை திரையுலக பிரபலங்கள் ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் பூஜைகளிலும் பங்கேற்கின்றனர். நடிகை சமந்தா, நவராத்திரி விழாவின் முதல் நாளில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் துர்கா தேவி சிலை முன்பாக வழிபாடு செய்து தொடங்கினார்.
அதன்பின், சமந்தா, ஐதராபாத்தில் ஆலியா பட் நடித்துள்ள “ஜிக்ரா” படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், அவர் தனது தோழி மற்றும் பின்னணி பாடகியான சின்மயியின் வீட்டுக்கு விசிட் செய்தார்.
சமந்தா, அங்கு நடைபெற்ற நவராத்திரி பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, சின்மயியின் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு வீடியோ பதிவு செய்தார். அது, அப்பா அம்மாவுக்கு டாட்டா சொல்லும் நகைச்சுவையான வடிவில் உருவாக்கப்பட்டது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சின்மயியும் சமந்தாவும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.