நடிகை ஆலியா பட் ஹிந்தியில் நடித்து இருக்கும் “ஜிக்ரா” திரைப்படம் அக்., 11ம் தேதி வெளியாவதாக உள்ளது. தெலுங்கில் இத்திரைப்படம் வெளிவர இருப்பதால், ஹைதராபாத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் சமந்தா பற்றி பேசும்போது, “நடிகர் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்களை பெற்றவர் சமந்தா. அவருடன் நான் மூன்று படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. சமந்தா நடித்த ‘ஏ மாயா செசாவே’ படம் வெளியானபோது, அல்லு அர்ஜுன் அவருடைய மிகப்பெரிய ரசிகரானார் என்பதை பாருங்கள் என்று பாராட்டினார்.
நடிகை ஆலியா பட் தனது உரையில், “நடிகைகள் என்றாலே ஒருவருக்கொருவர் போட்டி போட வேண்டும் என சொல்லப்படும். ஆனால், உண்மையில் அது அவ்விதமாக இல்லை. இதோ, இங்கு என்னுடைய படத்தை புரமோட் செய்வதற்காக பான் இந்தியா சூப்பர் ஸ்டார் சமந்தா வந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. நானும் சமந்தாவும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை நீங்கள் எழுதி இயக்கினால் நன்றாக இருக்கும் என திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸிடம் கேட்டார்.